<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3771561358762699502</id><updated>2012-01-15T23:25:03.340-08:00</updated><category term='முஸ்லிம் தேடும் மனைவி'/><category term='ஹஜ்ஜின் வரலாறு'/><title type='text'>Vidivu of Muslims</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vidivuofmuslims.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Niyaz (Fasmir)</name><uri>http://www.blogger.com/profile/00101801541035672859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='17' height='32' src='http://4.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TUw_bdv8ckI/AAAAAAAAAMg/0RSe-Rj8I0s/s220/NiyasFasmir.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>10</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3771561358762699502.post-2732547760893001673</id><published>2012-01-15T23:22:00.001-08:00</published><updated>2012-01-15T23:25:03.359-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம் தேடும் மனைவி'/><title type='text'>முஸ்லிம் தேடும் மனைவி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;u&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: medium;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; பெண்ணைக் குறித்தும் திருமணத்தைக் குறித்தும் இஸ்லாம் போதிக்கும் உயர்வான  கண்ணோட்டத்தின்படி செயல்பட விரும்பும் ஒரு முஸ்லிமை, வெறும் வெளி அலங்காரங்களை  மட்டுமே கொண்ட இந்தக் கால இளம் பெண்கள் எவரும் கவர்ந்திட முடியாது. மாறாக,  முழுமையான மார்க்கப்பற்றுள்ள பெண்கள்தான் அந்த முஸ்லிமை ஈர்க்க முடியும். ஆகவே, தமது  வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தம் மண வாழ்வை நிம்மதியானதாகவும், மகிழ்ச்சி  கரமானதாகவும் ஆக்கக்கூடிய இஸ்லாமிய நற்பண்புகள் மிக்க பெண்ணையே அவர்  தேர்ந்தெடுப்பார் அதில் நிதானத்தையும் கடைப்பிடிப்பார். கொள்கையற்று வீணான  இளைஞர்களைப் போன்று வெறும் அழகையும், அலங்காரத்தையும், கவர்ச்சி யையும் மட்டுமே அவர்  நோக்கமாகக் கொள்ளமாட்டார். அதற்கெல்லாம் மேலாக உறுதிமிக்க மார்க்கப்பற்று, சிறந்த  அறிவு, அழகிய பண்பாடுகளை உடைய பெண்ணைத் தான் முஸ்லிம் தேடுவார். மேலும், இது  விஷயத்தில் நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்களின் வழிகாட்டுதலை கருத்தில் கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள் கூறினார்கள்: "நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக்  கப்படுகிறாள். அவளது செல்வத்துக்காக, அவளது குடும்பப் பாரம்பரியத்துக்காக, அவளது  அழகுக்காக, அவளது மார்க்கத்திற்காக. நீ மார்க்கமுடையவளையே தேடிப் பெற்றுக் கொள்! உன்  இருகரங்களும் மண்ணாகட்டும்!'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; (வாழ்த்துகிற பொழுது ‘உன் இருகரங்கள் மண்ணாகட்டும், உன் நெற்றி மண்ணாகட்டும்'  என்றெல்லாம் நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள் கூறுவார்கள். அதற்கு அதிகமதிகம் அல்லாஹ்விற்குச்  சிரம் பணி(ந்து ஸஜ்தா செய்)யட்டும் என்பது பொருளாகும்.)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மார்க்கத்தைப் பேணக்கூடிய பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள்  முஸ்லிம் இளைஞர்களுக்கு உபதேசித்தது, அழகான பெண்ணைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற  கருத்தில் அல்ல. ஏனென்றால், நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணைப்  பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கதே என்று கூறியிருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் தமது  மனதுக்கு மகிழ்ச்சியளிக்காத, கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்காத பெண்ணை மணந்து  சிரமத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே திருமணத்திற்கு முன் பெண்ணைப்  பார்த்துக்கொள்ளவும் நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள் கட்டளையிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; முகீரா இப்னு ஷஃஅபா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்களின் காலத்தில்,  நான் ஒரு பெண்ணை மணம் முடிக்கப் பேசினேன். நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள் ‘அந்தப் பெண்ணைப்  பார்த்தீரா?' என்று கேட்டார்கள். நான் ‘இல்லை' என்றேன். அதற்கு நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள்  அவளைப் பார்த்துக் கொள்! அது உங்களிடையே நேசத்தை ஏற்படுத்துவதற்கு மிக ஏற்றமாக  இருக்கும்'' என்று கூறினார்கள். (ஸுனனுன் நஸயி)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; அன்சாரிப் பெண்ணை மணந்து கொள்ள இருந்த ஒருவர் நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்களிடம் வந்தார். நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt;  அவர்கள், அவரிடம் ‘அப்பெண்ணைப் பார்த்தாயா?' என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை'  என்றார். ‘அப்பெண்ணைப் பார்த்துக் கொள்!' என அவருக்கு நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; கட்டளையிட்டார்கள்.  (ஸுனனுன் நஸயி)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; ஒரு நல்ல பெண்ணிடம், விரும்பத்தகுந்த ஆன்மிகப் பண்புகளை ஓர் ஆண் எதிர்பார்ப்பது  போன்றே அவள் அழகானவளாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கையான  ஒன்றுதான். இதை நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள் பல ஹதீஸ்களில் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த  இரண்டில் ஒன்று இருப்பதால் மற்றொன்று தேவையில்லை என்றாக முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; இதனால்தான் நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குக் கூறினார்கள்:   "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?  (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர்  கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப்  பாதுகாத்துக் கொள்வாள்.'' (முஸ்தத்ரகுல் ஹாகிம்)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; (இந்த இடத்தில், மனைவி தனது கற்பைப் பாதுகாப்பதையே கணவரைப் பாதுகாப்பதென்று நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt;  அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்களிடம் 'பெண்களில் மிகச்  சிறந்தவர் யார்?' என கேட்கப்பட்டது. அதற்கு நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள், 'கணவர் அவளைப்  பார்த்தால் மகிழ்விப்பாள். அவர் ஏவினால் கட்டுப்படுவாள். அவரது பொருளிலும் அவளது  ஆன்மாவிலும் அவர் வெறுக்கும் காரியங்களிலும் அவருக்கு மாறு செய்ய மாட்டாள்' என்று  கூறினார்கள். (முஸ்னது அஹ்மது)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; கணவருக்கு நிம்மதியையும் மகிழ்ச்சி யையும் நற்பாக்கியத்தையும் வழங்க ஆற்றல் பெற்ற  மனைவியின் தனித்தன்மையைப் பற்றி நபியவர்களின் உயர்ந்த கண்ணோட்டமாகும் இது. இத்தகைய  பெண்ணே இல்லறத்தில் திருப்தி, அமைதி, மன மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை வழங்கவும்  ஆற்றல் பெற்றவள். அது மட்டுமின்றி பல தலைமுறைகளுக்குச் சிறந்த பயிற்சியாளராகவும்  வீரர்களை உருவாக்குபவராகவும் மேதைகளை உற்பத்தி செய்பவராகவும் விளங்குவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; உடல், உணர்வு, ஆன்மா, அறிவின் தேட்டங்களுக்கு ஏற்ப உறுதிமிக்க, சமநிலை பெற்ற  அடிப்படையின் மீதே திருமணம் என்ற மாளிகை நிர்மாணிக்கப்பட வேண்டுமென நபி &lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt;  அவர்கள் ஆசைப்பட்டார்கள். அப்போதுதான் திருமண உறவு பலமாக அமைந்து வெறுப்புணர்வும்  மனக்கசப்பும் அதை அசைத்து விட முடியாமல் இருக்கும். ஆகவே, எல்லா நிலையிலும்  அல்லாஹ்வின் மார்க்கத்தையே பின்பற்றும் உண்மை முஸ்லிம் தீயகுணமுள்ள அழகிய பெண்ணின்  வலையில் சிக்கிவிடமாட்டார். மாறாக, அவளைவிட்டும் தாமும் விலகி மக்களையும்  எச்சரிப்பார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3771561358762699502-2732547760893001673?l=vidivuofmuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vidivuofmuslims.blogspot.com/feeds/2732547760893001673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/2732547760893001673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/2732547760893001673'/><link rel='alternate' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2012/01/blog-post.html' title='முஸ்லிம் தேடும் மனைவி'/><author><name>Niyaz (Fasmir)</name><uri>http://www.blogger.com/profile/00101801541035672859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='17' height='32' src='http://4.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TUw_bdv8ckI/AAAAAAAAAMg/0RSe-Rj8I0s/s220/NiyasFasmir.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3771561358762699502.post-1646055047771864172</id><published>2011-02-17T19:06:00.000-08:00</published><updated>2011-02-17T19:06:40.209-08:00</updated><title type='text'>மீலாது விழா கொண்டாடலாமா?</title><content type='html'>&lt;a href="http://www.islamkalvi.com/portal/?p=41"&gt;மீலாது விழா கொண்டாடலாமா?&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3771561358762699502-1646055047771864172?l=vidivuofmuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.islamkalvi.com/portal/?p=41' title='மீலாது விழா கொண்டாடலாமா?'/><link rel='replies' type='application/atom+xml' href='http://vidivuofmuslims.blogspot.com/feeds/1646055047771864172/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/1646055047771864172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/1646055047771864172'/><link rel='alternate' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2011/02/blog-post.html' title='மீலாது விழா கொண்டாடலாமா?'/><author><name>Niyaz (Fasmir)</name><uri>http://www.blogger.com/profile/00101801541035672859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='17' height='32' src='http://4.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TUw_bdv8ckI/AAAAAAAAAMg/0RSe-Rj8I0s/s220/NiyasFasmir.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3771561358762699502.post-6725111460340939984</id><published>2010-11-21T22:07:00.000-08:00</published><updated>2010-11-21T22:07:11.984-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹஜ்ஜின் வரலாறு'/><title type='text'>ஹஜ்ஜின் வரலாறு</title><content type='html'>&lt;div class="headline_area"&gt;       &lt;img alt="Post image for ஹஜ்ஜின் வரலாறு" class="post_image alignleft remove_bottom_margin" height="29" src="http://www.readislam.net/haj.ht1.gif" width="194" /&gt;      &lt;div class="headline_meta"&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;a href="http://www.readislam.net/portal/archives/category/%e0%ae%aa%e0%af%86%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%af%88" rel="category tag" title="View all posts in பொதுவானவை"&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;எப்படி எந்த நோக்கத்திற்காக ஹஜ் துவங்கிற்று என்பதை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலச்சூழ்நிலைகள் அறிவது அவசியம். இப்ராஹீம்(அலை) அவர்களின் மகனார் இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப்பிறகு அவர்களின் வழித்தோன்றல்கள் மார்க்கத்தில் எவ்வளவு காலம் நிலைத்து நின்றார்கள் என இறைவன்தான் அறிவான்! எப்படியோ சில நூற்றாண்டுகளில் இந்த மக்கள் வழிகேட்டில் புகுந்துவிட்டனர். ஒரே இறவனை வணங்குவதற்கும் அழைப்பதற்கும் அமைக்கப்பட்ட இறை ஆலயத்தில் நூற்றுக்கணக்கில் சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன.&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue; font-family: Traditional Arabic; font-size: medium;"&gt;لًبّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ&amp;nbsp; وَالْمُلْكَ&amp;nbsp; لاشَرِيْكَ&amp;nbsp; لَك&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; “நான் வந்திருக்கிறேன். எனது இறைவனே! வந்திருக்கிறேன். உனக்கு இணை துணை கிடையாது. நான் வந்திருக்கிறேன். நிச்சயமாக புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானவை. அருட்கொடைகள் அனைத்தும் உன்னுடையவை. எல்லாவிதமான ஆட்சிகளும் உனக்கே உரித்தானவை. உனக்கு இணை எவரும் கிடையாது.”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதில் விசித்திரம் என்னெவென்றால் சிலை வணக்கத்தை ஒழிப்பதற்காகவே தம் வாழ்நாளெல்லாம் உழைத்த இப்ராஹீம் நபி இஸ்மாயீல் நபி ஆகியோருக்கும் சிலைகள் தயாரிக்கப்பட்டு விட்டன. நேர்வழியில் நின்ற இப்ராஹீம் நபியின் சந்ததியினர் ‘லாத்’ ‘மனாத்’ ‘ஹூபல்’ ‘நஸ்ர்’ ‘யாகூது’ ‘உஸ்ஸா’ ‘அஸாப்’ ‘நாயிலா’ இப்படி பல பெயர்களில் சிலைகளை வடித்து வணங்கினார்கள். செவ்வாய், புதன், வெள்ளி, சனி இப்படி இன்னும் எந்த எந்தத் கோளங்களை அவர்கள் வணங்கினார்கள் என்றும் தெரியவில்லை. பேய், பிசாசு, வானவர்கள் இறந்து போன தங்களுடைய பெரியார்கள் ஆகியோரையும் அவர்கள் வணங்கினார்கள். அறியாமை இந்த அளவுக்கு முற்றிப் போயிருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; அவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டு விட்டால் பயணத்தில் வணங்குவதற்கு தெய்வச் சிலை இல்லாவிட்டால் கல் ஒன்று கிடைத்தாலும் வணங்க ஆரம்பித்து விடுவார்கள். கல்லும் கிடைக்கவில்லை என்றால் மண்ணைத் தண்ணீரில் குழைத்து உருவம் அமைத்து ஆட்டு பாலைத் தெளித்து வணங்குவார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஹஜ்ஜின் தவறான வடிவங்கள்:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; அந்த அஞ்சான காலத்தில் ஹஜ்ஜின் கதி எப்படி இருந்தது என்பத எண்ணிப்பாருங்கள்; ஒவ்வொரு ஆண்டும் அங்கே ஒரு திருவிழா நடைபெற்றது. பல குலத்தவர்கள் தம் இனத்தாரோடு இங்கே வந்து தனித்தனியே முகாம் போடுவார்கள். அவரவர்கள் தங்களைச் சேர்ந்த கவிஞர்கள் அல்லது துதி பாடர்கள் தம்மிடமும் தம் குலத்தாரிடம் உள்ள பெருமைகளை பாடி பெருமையடித்துக் கொள்வதில் மற்றவர்களை முந்துவார்கள். இறுதியில் அவர்கள் ஒருவரையொருவர் இழித்துரைக்கும் அளவுக்கு நிலைமை முற்றிவிடும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; அப்புறம் எவர் தர்மப்பிரபு எவர் கொடைவள்ளல் என்கிற போட்டி நடக்கும்! குலத்தலைவரும் தமது பெருமையை பறைசாற்ற சமையலில் பெரிய பெரிய அண்டாக்களையும் குண்டாக்களையும் வரிசை வரிசையாக அடுப்புகளில் ஏற்றுவார்கள். ஒருவரையொருவர் மிகைப்பதற்காக ஒட்டகத்திற்கு மேல் ஒட்டகத்தை அறுத்துக்கொண்டே போவார்கள். இந்த வீண் செலவுக்காண நோக்கம் இதுதான். இந்தத் தடவை நடந்த திரு விழாவில் இத்தனை பேருக்கு உணவளித்தார் என்று பிரசாரம் ஆகவேண்டும். இந்தக் கூட்டத்தில் மதுபானம், விபச்சாரம், இசை படுமோசமான செயல்கள் அனைத்தும் தாராளமாக நடந்து கொண்டிருந்தன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நிர்வாணமாக வலம் வருதல்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; காபாவை சுற்றி வலம் வருதலும் நடந்துகொண்டுதான் இிருந்தது. ஆனால் எப்படி நிர்வாணமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்? எங்கள் அன்னையர் எங்களை எந்த நிலையில் பெற்றெடுத்தார்களோ அந்த நிலையில்தான் நாங்கள் இறைவன் முன் செல்வோம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; இறைவன் பெயரால் பலியும் தியாகச் செயல்களும் கூடச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் எப்படியென்றால் பலியிடப்பட்டவற்றின் இரத்ததை கஃபாவின் சுவர்களிலெல்லாம் தடவுவார்கள். மாமிசத்தை வாசலில் பரப்புவார்கள்; இந்த இரத்தமும் மாமிசமும் இறைவனுக்கு தேவை என்ற எண்ணத்தில்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; இப்ராஹீம்&amp;nbsp; நபியவர்கள்&amp;nbsp; ஹஜ்ஜின்&amp;nbsp; நான்கு மாதங்களை&amp;nbsp; தடுக்கப்பட்டவை&amp;nbsp; என்றும், &amp;nbsp;இந்த மாதங்களில் எந்த விதமான&amp;nbsp; சண்டையும் வம்பும் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தார்கள். இந்த&amp;nbsp; மக்கள் ஏதோ அந்த மாதங்களின் கண்ணியத்தை சிறிதளவு மனத்தில் வைத்திருந்தார்கள். ஆனால் மனம் சண்டையிட விரும்பினால் துணிச்சலான சந்தர்ப்பவாதத்தை வைத்துக்கொண்டு ஓர் ஆண்டில் தடை செய்யப்பட்ட மாதத்தை அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொண்டு அடுத்த ஆண்டில் அதற்கு ஈடு செய்து கொள்வார்கள். அத்துடன் தமது மார்க்கத்தில் நல்லெண்ணம் கொண்டிருந்த அவர்களில் ஒரு சிலரும் தமது அறியாமையின் காரணத்தினால் நூதனமான புதிய முறைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நூதனமான தடைகள்:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; சிலர் வழிச்செலவுக்கு எவ்வித ஏற்பாடும் இல்லாமல் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு மற்றவர்களிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் ெ காண்டே போய்க்கொண்டிருந்தார்கள். இது புண்ணியமான செயல் என்றும் நினைத்தார்கள். தாங்கள் இறைவன்&amp;nbsp; வீட்டை&amp;nbsp; நோக்கிப் போய்க்&amp;nbsp; கொண்டிருக்கிறோம் எனவே&amp;nbsp; உலகப் பொருள்களை நாங்கள் ஏன் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.&amp;nbsp;பொதுவாக ஹஜ் பயணத்தில் வணிகம் செய்வதும் சம்பாதிப்பதற்காக&amp;nbsp; உழைப்பதும் தடுக்கப்பட்டவை என்று கருதிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலோர் உண்ணுவதையும், குடிப்பதையும் துறந்திருந்தார்கள். இதையும் இறை வழிபாடு என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சிலர் ஹஜ்ஜுக்கு புறப்பட்டால் உரையாடலை நிறுத்திக் கொள்வார்கள். இதற்கு ‘ஹஜ்ஜெமுஸ்மித்’ மெளன ஹஜ் என்று பெயர். இப்படிப்பட்ட தவறான நடைமுறைகள் கணக்கின்றி இருந்தன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; இந்த நிலைமை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்தன. பின்னர் இப்ராஹீம் நபியின் வழித்தோன்றலில் இருந்து முழுமையான மனிதர் ஒருவர் தோன்றினார். அவர்களின் திருப்பெயர் முஹம்மது பின் அப்துல்லாஹ்.&amp;nbsp; எவ்வாறு &amp;nbsp;இப்ராஹீம் நபி அவர்கள் பண்டிதர்களும் குருக்களும்&amp;nbsp; கொண்ட&amp;nbsp; குலத்தில் பிறந்தார்களோ அவ்வாறே முஹம்மத்(ஸல்) அவர்களும் பல நூற்றாண்டுகளாக கஃபாவுக்கு குருக்களாயிருக்கும் குடும்பத்தில் பிறந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இப்ராஹீம் நபியவர்கள் பொய்யான தவறான தெய்வ மூடக்கொள்கைகளை அழிக்க பெரும்பாடு பட்டதைப் போல் முஹம்மது(ஸல்) அவர்களும் தாங்கள் கொண்டு வந்த கலப்படமற்ற மார்க்கத்தை 21 ஆண்டு காலத்தில் இறைப்பணியை எல்லாம் செய்து முடித்தபோது அவர்கள் இறைக்கட்டளைப்படி முன்போலவே காபாவை முழு உலகத்துக்கும் இறைவனுக்கு வழிபட்டோருக்குரிய கேந்திரமாக எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஹஜ் செய்ய வாருங்கள் என முன்போலவே அறிவித்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; அந்த ஆலயத்திற்குச் சென்று வர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்கு ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான். (3:97)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; சிலை வணக்கம் ஒழிந்தது:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; கஃபாவிலுள்ள சிலைகள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டன. இறைவனைத் தவிர மற்றவருக்கு செய்த வழிபாடுகள்&amp;nbsp; அனைத்தும் நிறுத்தப்பட்டன. இணைவைக்கும் பழக்கங்கள் அடியோடு அழிக்கப்பட்டன. இறைவன் பெயரால் திருவிழாக்களும்,&amp;nbsp; வேடிக்கைகளும்&amp;nbsp; தடை செய்யப்பட்டன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; அவன் எவ்வாறு (தன்னை நினைவு கூறவேண்டுமென்று) உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றானோ அவ்வாறு அவனை நினைவு கூறுங்கள்! இதற்கு முன்னரோ நீங்கள் வழி தவறியவர்களாய் இருந்தீர்கள். (2:198)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; அபத்தமான செயல்:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக்கூடிய சொல் செயல் மற்றும் தீவினை சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது! (2:197)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; பின்னர் நீங்கள் உங்களுடைய ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டீர்களானால், நீங்கள் (முன்னர்) உங்கள் மூதாதையரை நினைவு கூர்ந்தது போல- ஏன், அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். (2:200)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; விளம்பரத்திற்காக தடை:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; பெயருக்காகவும், விளம்பரத்துக்காகவும் செய்யப்பட்டு வந்த ஆடம்பரமான தான தர்ம போட்டிகள் அனைத்திற்கும் முடிவு கட்டப்பட்டது. இந்த இடத்தில் இப்ராஹீன் நபியவர்கள் காலத்திலிருந்த அதே செயல்முறை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டது. இறைவனின் திருப்பெயர் கொண்டு பிராணிகளை அறுங்கள், வசதியுள்ளவர்களின் தியாகத்தால் ஹஜ்ஜுக்கு வருகிற ஏழைகளுக்கும் உண்ணும் வாய்ப்பு கிடைக்கட்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை. (7:31)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; குர்பானியின் இரத்தத்தை பூசத் தடை:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; குர்பானியின்&amp;nbsp;இரத்தத்தை கஃபாவின் சுவர்களில் தடவுவதும், இறைச்சியை கொண்டு வந்து&amp;nbsp; பரப்புவதும் நிறுத்தப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. (22:37)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நிர்வாணமாக வலம் வரத்தடை:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; (நபியே! அவர்களிடம்) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடிமைகளுக்காகத் தோற்றுவித்துள்ள (ஆடை) அலங்காரத்தை தடை செய்தது யார்? (7:32)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; நீர் கூறும்: அல்லாஹ் மானக்கேடானவற்றைச் செய்யும்படி எப்போதும் கட்டளை இடுவதில்லை. (7:28)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; புனித மாதங்களை மாற்றத் தடை:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; ஏதேனும் ஓர் ஆண்டில் (போர் தடுக்கப்பட்ட) ஒரு மாதத்தை (போருக்காக) அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் மறு ஆண்டில் அதே மாதத்தில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். எனெனில் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்டுள்ள மாதங்களின் எண்ணிக்கையைப் பூர்த்தியாக்க வேண்டும் என்பதற்காக! (9:37)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; வழிச்செலவுக்கு வசதியில்லாமல் ஹஜ்ஜுக்கு செல்வது தடுக்கப்பட்டது:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; மேலும் நீங்க (ஹஜ்ஜுக்காக) வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள்! உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். (2:197)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; ஹஜ் காலத்தில் வியாபார அனுமதி:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; ஹஜ் பயணத்தில் சம்பாதிக்காமலிருப்பது நற்செயல் என்றும், வருமானம் தேடுவது ஆகாத செயல் என்றும் கருதப்பட்டு வந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; (ஹஜ் பயணத்தில்) உங்கள் இறைவனின் அருளை தேடிக்கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. (2:198)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; மெளன ஹஜ்ஜும். உண்ணாமலும், பருகாமலும் இதர அறியாமைச் சடங்குகள் அனைத்தும் அழித்து விட்டு இறையச்சம், ஒழுக்கம், தூய்மை எளிமை ஆகியவற்றின் முழு வடிவமாக ஹஜ் ஆக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; கஃாபாவிற்கு வருகிற பாதைகள் அனைத்திலும் கஃபாவிலிருந்து இருபது மைலுக்கு அப்பால் ஒவ்வோர் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய இல்லத்தில் எளியவராகவும், தாழ்மையுடையவராகவும் வருகை புரியவேண்டும். பணக்காரர்கள், ஏழைகள் எவராயினும் அந்த எல்லையை அடைந்ததும் ‘இஹ்ராம்’ எனும் எளிய உடைகளை அணியவேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது.&lt;/div&gt;&amp;nbsp;&amp;nbsp; அமைதியான சூழ்நிலை ஏற்படுதல்:&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp; சாந்தி சமாதானத்தை நேசிக்கும் மனப்பாங்கு ஏற்படவும் இறை ஆலயத்திற்கு வருவோர்க்கு எவராலும் எந்தத் தீங்கும் நிகழக்கூடாது என்பதற்காகவே ஹஜ்ஜுக்குறிய நான்கு மாதங்களை கண்ணியப்படுத்தி அம்மாதங்களில் போரிடுவது தடுக்கப்பட்டது. ஹாஜிகள் கஃபாவுக்கு வரும்போது அவர்களுக்கு அங்கே திருவிழாக்களோ, ஆடலோ பாடலோ இராது. மாறாக ஒவ்வோர் அடியிலும் இறைவனின் தியானம் இருக்கும்; தொழுகைகள் இருக்கும், வழிபாடுகள் இருக்கும்; தியாகங்கள் இருக்கும்; கஃபாவைச் சுற்றி வலம் வருதல் இருக்கும்; அங்கு உச்சரிக்கப்படும் வாக்கியங்கள் இவையே!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அபுல் அஃலா மெளதூதி &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;http://www.readislam.net/portal/archives/996 &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3771561358762699502-6725111460340939984?l=vidivuofmuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vidivuofmuslims.blogspot.com/feeds/6725111460340939984/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/11/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/6725111460340939984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/6725111460340939984'/><link rel='alternate' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/11/blog-post_21.html' title='ஹஜ்ஜின் வரலாறு'/><author><name>Niyaz (Fasmir)</name><uri>http://www.blogger.com/profile/00101801541035672859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='17' height='32' src='http://4.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TUw_bdv8ckI/AAAAAAAAAMg/0RSe-Rj8I0s/s220/NiyasFasmir.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3771561358762699502.post-6396813848366134793</id><published>2010-10-07T09:34:00.000-07:00</published><updated>2010-10-07T09:42:28.357-07:00</updated><title type='text'>கிரக பலன்களையும் ராசி பலன்களையும் நம்புவது</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TK33nNMIIfI/AAAAAAAAAF8/UiP0ff2g2nk/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TK33nNMIIfI/AAAAAAAAAF8/UiP0ff2g2nk/s1600/images.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன  என நம்புவதும் குஃப்ராகும்.&lt;/span&gt;  &lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஜைது இப்னு காலித் அல்ஜுஹனி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு முறை நபி&lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள் ஹுதைபிய்யாவில்  சுப்ஹு தொழுகையை தொழ வைத்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுகை முடிந்தவுடன் மக்களை முன்னோக்கி  "உங்களது இறைவன் என்ன கூறினான் என்பதை அறிவீர்களா?' என்று வினவினார்கள். "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்'  என நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபி&lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான் "எனது அடியார்களில்  என்னை விசுவாசித்தவரும் என்னை மறுத்தவரும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் கிருபையாலும் அவனது அருளாலும் நமக்கு  மழை பொழிந்தது என்று கூறியவர் என்னை விசுவாசித்து கிரகங்களை மறுத்தவராவார். இன்ன கிரகத்தின் காரணமாக மழை பொழிந்தது என்று கூறுபவர் என்னை நிராகரித்து கிரகத்தை விசுவாசித்தவராவார்.'' (ஸஹீஹ முஸ்லிம்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில் வெளியிடப்படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவது ஷிர்க்காகும். அதை படிப்பதும் பெரும் குற்றமாகும். காரணம், அது ஷிர்க்கிற்கு வழிவகுத்து விடும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அல்லாஹ் அனுமதிக்காதவைகளிலிருந்து பயன்களைத் தேடுவது&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சிலர் தாயத்துகள், கயிறுகள், வளையங்கள் போன்றவற்றை அணிந்து கொள்கிறார்கள் அல்லது தங்களது பிள்ளைகளுக்கு  அணிவிக்கிறார்கள். சிலர் தங்களது கை, கழுத்து, இடுப்பில் அவைகளை கட்டிக் கொள்கிறார்கள். சிலர் சில கற்களை  ராசிக்கல் என்று கூறி அதை மோதிரங்களில் பதித்து அணிகிறார்கள். இவ்வகையான அனைத்து செயல்களும் இறை நம்பிக்கைக்கு எதிரானதாகும். இவை மென்மேலும் ஈமானில் பலவீனத்தை எற்படுத்துகின்றன.  இவைகளின் மூலம் நிவாரணம் தேடுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பெரும்பாலான தாயத்துகளில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வாசகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அல்லது புரிந்துகொள்ள  முடியாத சில படங்களும், எழுத்துக்களும், கட்டங்களும் காணப்படுகின்றன. தாயத்து எழுதுபவர்களில் சிலர் குர்ஆன்  வசனங்களையும் இணை கற்பிக்கும் வாசகங்களையும் இணைத்து எழுதுகிறார்கள். சிலர் திருக்குர்அன் வசனங்களை  நஜீஸ்(அசுத்தங்)களைக் கொண்டோ அல்லது மாதவிடாய் உதிரத்தைக் கொண்டோ எழுதுகிறார்கள். இம்மாதிரியானவைகளை  அணிந்து கொள்வதோ, எங்கேனும் தொங்க விடுவதோ தடுக்கப்பட்ட பெருங்குற்றமாகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நபி&lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள் கூறினார்கள்: "தாயத்தைத் தொங்க விட்டவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டான். '' (முஸ்னத்  அஹமத்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இக்காரியங்களைச் செய்பவன், இவைகள் தானாகவே நன்மை தீமை செய்யும் ஆற்றல் பெற்றவை என நம்புபவன் பெரிய  "ஷிர்க்'கைச் செய்தவனாவான். அனைத்து  வகை ஷிர்க்கும் பெரும் பாவத்தைவிட மிகக் கொடியதாகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3771561358762699502-6396813848366134793?l=vidivuofmuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vidivuofmuslims.blogspot.com/feeds/6396813848366134793/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/6396813848366134793'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/6396813848366134793'/><link rel='alternate' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/10/blog-post.html' title='கிரக பலன்களையும் ராசி பலன்களையும் நம்புவது'/><author><name>Niyaz (Fasmir)</name><uri>http://www.blogger.com/profile/00101801541035672859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='17' height='32' src='http://4.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TUw_bdv8ckI/AAAAAAAAAMg/0RSe-Rj8I0s/s220/NiyasFasmir.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TK33nNMIIfI/AAAAAAAAAF8/UiP0ff2g2nk/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3771561358762699502.post-8607236083235378390</id><published>2010-09-08T00:25:00.000-07:00</published><updated>2010-09-08T00:25:35.128-07:00</updated><title type='text'>கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை)</title><content type='html'>&lt;h2 class="title"&gt;&lt;a href="http://www.islamkalvi.com/portal/?p=4631" rel="bookmark"&gt;கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை)&lt;/a&gt;&lt;/h2&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எங்கே அமைதி? &lt;/strong&gt;&lt;br /&gt;அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கும் எண்ணற்ற அருட்கொடைகளில் மிகவும்  சிறந்ததும், அனைவரும் விரும்புவதும் ‘அமைதி’ என்று சொன்னால் அது  மிகையாகாது. காசு கொடுத்து வாங்க முடியாத பொருள் அது. மற்றவர்களை  விடுங்கள், அமைதி மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய நம்  சமுதாயத்தில் அமைதி இருக்கிறதா?&lt;span id="more-4631"&gt;&lt;/span&gt; இலட்சங்கள்  அலட்சியமாகப் பறக்கும் ஆடம்பரத் திருமணங்கள் மணல் வீடாகக் கலைந்து போகும்  அவலம் தினந்தோறும் நடக்கின்றன. இது ஒரு சமுதாயத்தின் அமைதியைக்  குறிக்கிறதா? இல்லை! அலங்கோலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குடும்ப  அமைப்பு சீர்குலைந்தால் மொத்த சமுதாயமுமே சீர் குலைந்து போகும். பின் எங்கே  நிம்மதி? இந்நிலைக்குப் புற அம்சங்களைக் காரணம் காட்டாமல் நம் தாழ்வுக்கு  நாமே காரணம் என்ற பொறுப்புணர்வுடன் எங்கே தவறினோம் நாம்? என்ற சுய  அலசலிலும் இந்நிலையை எப்படி சரி செய்வது என்ற ஆரோக்கியமான அணுகுமுறையிலுமே  ஈடேற்றம் பெற முடியும்.&lt;br /&gt;&lt;strong&gt;திருமணம் தீனில் ஒரு பகுதி&lt;/strong&gt;&lt;br /&gt;திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம்  என்பது பொது விதி. ஆனால் இஸ்லாம் ஒருபடி மேலே போய் ‘ஒருவன் திருமணம்  புரிந்தால் அவன் இறைமார்க்கத்தில் ஒரு பகுதியை நிறைவேற்றி விட்டான்.  எஞ்சியவற்றில் அவன் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளட்டும்.’ (பைஹகி) என்று  கூறுகிறது. இன்னும் ஒரு நபிமொழி இக்கருத்தை வலியுறுத்துகிறது. ‘திருமணம்  என் வழிமுறை (சுன்னத்). என் வழிமுறையைப் புறக்கணித்தவர் எம்மைச் சார்ந்தவர்  அல்லர்.’ (இப்னு மாஜா)&lt;br /&gt;&lt;strong&gt;திருமணத்தால் அமைதி கிடைக்கிறது&lt;/strong&gt;&lt;br /&gt;‘அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள்  அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும்  கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில்  நிறைய சான்றுகள் உள்ளன’ (அல்குர்ஆன் 30:21)&lt;br /&gt;இந்த வசனத்தைப் படித்தால் மட்டும் போதாது சிந்திக்க வேண்டும்..&lt;br /&gt;குழந்தைகள் தான் திருமண வாழ்வின் பரிசு. அவர்கள் பெற்றோர்களுக்குக்  கண்குளிர்ச்சியாகவும், பரபரப்பான வாழ்வில் அமைதி கொடுப்பவர்களாகவும்  இருக்கிறார்கள். இறைவன் அனுமதித்த முறையில் இனவிருத்திக்கும் திருமணமே  சிறந்தது என்பதை கீழ்வரும் வசனம் உணர்த்துகிறது.&lt;br /&gt;‘மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன்  உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர்  மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும்  பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்.’ (அல்குர்ஆன் 4:1) &lt;br /&gt;&lt;strong&gt;கொடுப்பது&lt;/strong&gt;&lt;br /&gt;கீழே உள்ளவை, நம்பிக்கையாளர்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய இரு ஒளிகளாகிய  குர்ஆன், ஹதீஸ் இவற்றில் ‘கொடுப்பது’ பற்றி உள்ள செய்திகள், கட்டளைகள்.&lt;br /&gt;‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (&lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%b0%e0%af%8d"&gt;மஹர்&lt;/a&gt;) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) &lt;br /&gt;‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த  உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன்  33:50)&lt;br /&gt;‘பெண்களை நீங்கள் தீண்டுவதற்க்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம்  செய்வதற்க்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும்  அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் – அதாவது செல்வம்  படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து,  நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.’  (அல்குர்ஆன் 2:236)&lt;br /&gt;‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம்  செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு  (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம்  அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%b0%e0%af%8d"&gt;மஹர்&lt;/a&gt;)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’ (அல்குர்ஆன் 4:24)&lt;br /&gt;‘எந்த நிபந்தனையின் வாயிலாக நீங்கள் பெண்களின் கற்புக்கு  உரிமையாளர்களாய் ஆகிறீர்களோ அதுவே மற்றெல்லா நிபந்தனைகளை விட முன்னதாக  நிறைவேற்றிட உரிமை பெற்ற நிபந்தனையாகும்.’ (நபிமொழி – புகாரி, முஸ்லிம்)&lt;br /&gt;&lt;strong&gt;எடுப்பது&lt;/strong&gt; &lt;br /&gt;கொடுப்பதைப் பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறியுள்ளவற்றைப்  பார்த்தோம். ‘எடுப்பது’ என்பதைப் பற்றி, அதாவது திருமணம் செய்யப் போகும்  பெண்ணிடமிருந்தோ அவளுடைய பெற்றோரிடமிருந்தோ ‘எடுப்பது’ பற்றி ஏதாவது  இருக்கிறதா என்று குர்ஆனின் 114 அத்தியாயத்திலும் தேடினாலும் ஒரு வசனம் கூட  கிடைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது,  தோட்டம், திர்ஹம், தங்கம் இவை மட்டுமல்லாமல் இரும்பு மோதிரம், கேடயம் ஏன்  மனப்பாடம் செய்த சூராவைக் கூட மஹராக ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பவங்களைப்  பார்க்கிறோம். ஆனால் பெண் இத்தனை பவுன் நகை, சீர் வரிசை, பலகாரங்கள்,  இத்தியாதிகள் இவற்றுடன் கணவன் வீட்டுக்குச் சென்றாள் என்று எந்தக்  குறிப்பும் இல்லை. &lt;br /&gt;&lt;strong&gt;‘எடுப்பது’ எப்படி வந்தது?&lt;/strong&gt;&lt;br /&gt;பெண் வீட்டாரிடமிருந்து வாங்குவது என்பது மற்ற சமுதாயத்தினரின் செயல்.  பெண் என்றால் சீதனத்துடன் தான் கணவன் வீட்டிற்குச் செல்ல வேண்டும்,  மாப்பிள்ளைக்கு &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88"&gt;வரதட்சணை&lt;/a&gt;  தர வேண்டும் என்பதெல்லாம் ‘அவர்கள்’ சம்பிரதாயங்கள். இறைவேதத்தையும்,  நபிவழியையும் முதுகுக்குப் பின்னால் தூக்கிப் போட்டு விட்டு ‘அவர்களை’ப்  பின்பற்ற ஆரம்பித்து விட்டோம் நாம். &lt;br /&gt;ஒரு பேச்சாளர் ‘இப்போது நடக்கும் திருமணங்கள் வியாபாரம் போல்  ஆகிவிட்டன.’ என்று குறிப்பிட்டார். இது என்னைச் சிந்திக்க வைத்தது –  வியாபாரம் என்றால் பணத்தைக் கொடுத்து ஒரு பொருளை வாங்குவது அல்லது பொருளை  விற்று பணத்தைப் பெறுவது. சரி, நம் கையை விட்டுப் பணம் போகும் போது பொருள்  நம் கைக்கு வர வேண்டும் – அது தான் வியாபாரம். ஆனால், திருமணத்தில் பணம்  நம் கையை விட்டுப் போகிறது, பெண்ணும் போகிறாள், ஆனால், நம் கைக்கு எதுவும்  வருவதில்லை. இது எந்த வியாபார விதிக்கும் உட்பட்டதாக இல்லையே.. மோசடி  வியாபாரமாக அல்லவா இருக்கிறது!&lt;br /&gt;சந்தையில் மாடு விற்பவன் கூட மாட்டைக் கொடுத்து விட்டுப் பணத்தை எண்ணி  வாங்கிக் கொள்கிறான். ஆனால் பெண்ணைப் பெற்றவனோ, பெண்ணையும் கொடுத்து,  பொன்னையும் கொடுத்து, சீர் என்ற பெயரில் புழங்குவதற்கு சாமான்களையும்  கொடுத்து, பிறகு பணத்தையும் கொடுக்கிறான்.. நம் பெண்கள் மாட்டைவிடவா  கேவலமாகி விட்டார்கள்? &lt;br /&gt;இதை பெண்களும் யோசிக்க வேண்டிய விஷயம்.. பொன்னோடும், பொருளோடும்  மாமியார் வீட்டுக்குப் போவது தான் பெருமை என்ற எண்ணத்தை பெண்கள் மாற்றிக்  கொள்ள வேண்டும். ஏனோ தெரியவில்லை நம் சகோதரர்களுக்கு தவ்ஹீத் சிந்தனை  திருமணமான பிறகு தான் வருகிறது. வாங்கிய &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88"&gt;வரதட்சணை&lt;/a&gt;யைத் திருப்பிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இந்த விழிப்புணர்வு திருமணத்திற்கு முன்பே வந்திருந்தால் &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88"&gt;வரதட்சணை&lt;/a&gt; கொடுக்க வசதியற்ற பெண்ணுக்கு வாழ்வு கிடைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;strong&gt;மறைமுகமாக எடுப்பது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88"&gt;வரதட்சணை&lt;/a&gt;  என்று ரொக்கமாக வாங்காவிட்டால் தாங்கள் நபிவழியில் திருமணம் புரிந்ததாக  சிலர் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள். மார்க்கத்தில் இல்லாத நூதன  விழாக்களால் பெண் வீட்டிற்கு எத்தனை வீண் செலவுகள்! பெண் பார்த்தல்,  நிச்சயதார்த்தம், மருதாணி விழா, ஆடம்பரமான மண்டபம் அல்லது ஐந்து நட்சத்திர  ஹோட்டலில் நிக்காஹ் விருந்து, மறு வீடு என்று விருந்துக்கு மேல்  விருந்தாகவும், பலகார வகைகள், சீர் என்று வித விதமான செலவினங்கள். கட்டில்,  பீரோ, ஏசி, ஃபிரிஜ் என்பதெல்லாம் காலத்தின் கட்டாயமாகிவிட்டது.  எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கம் விற்கும் விலையில் படித்த மாப்பிள்ளை  என்றால் குறைந்த பட்சம் ஐம்பது பவுன் என்பது எழுதாத சட்டமாகி விட்டது.  இத்தனையையும் கேட்டு வாங்கினால் தானே தவறு? கேட்காமலேயே வரக்கூடிய இடமாகப்  போய் பெண் எடுத்தால் வம்பில்லையே.. ‘வீண் செலவு செய்பவர்கள் ஷைத்தானின்  சகோதரர்கள்’ (அல்குர்ஆன் 17:27) என்ற திருவசனம் இவர்களின் மனதில்  பதியவில்லையா? அல்லது, ‘வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.’  (அல்குர்ஆன் 7:21) என்ற வசனத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்களா?  அல்லது, ‘குறைந்த செலவில் குறைந்த சிரமத்துடன் செய்யப்படும் திருமண  நிகழ்ச்சியே சிறந்ததாகும்.’ என்ற நபிமொழியைக் காலத்துக்கு ஒவ்வாதது என்று  ஒதுக்கி விட்டார்களா?!!&lt;br /&gt;&lt;strong&gt;விளைவுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;இன்றைய திருமணங்கள் இறையச்சத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. எப்படி  என்று கேட்கிறீர்களா? அல்லாஹ் திருமறையில், வட்டியைப் பற்றி, ‘யார் வட்டி  வாங்கித் தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்டவனாக  எழுவது போலல்லாமல் (வேறு விதமாக) எழ மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள்  ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம். அல்லாஹ்  வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்…’ (அல்குர்ஆன்  2:275) என்றும் ‘ஈமான் கொண்டோரே, இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில்  வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி  (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.’(அல்குர்ஆன் 3:130)  என்றும் கூறி நம்மைக் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.&lt;br /&gt;இருந்தாலும், பலர் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் எல்.ஐ.சி.இன் திருமகள்  திருமணத் திட்டம் என்று வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் சேமிக்கத்  தொடங்கி விடுகின்றனர். காரணம், அப்படி சேர்க்கும் தொகை அவள் திருமண வயதில்  வட்டியோடு குட்டி போட்டு பெருந்தொகையாக இருக்கும். இப்படி ஹராமாக சேர்த்த  பணத்தையோ, அல்லது வட்டிக்கு கடன்பட்டோ தான் கைக்கூலியாகவும், நகையாகவும்,  சீராகவும், கொடுக்கிறார்கள். நினைத்துப் பார்த்தால் அருவருப்பாக இல்லை?  ஒருவன், ஹராமான வழியில் பொருளீட்ட காரணமாயிருப்பது யார் என்று யோசித்துப்  பாருங்கள். மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;ஹஜ் செய்வது இஸ்லாத்தில் கட்டாயக்கடமை. அதாவது பொருள் வசதியும்,  உடல்வலிமையும் உள்ளவர்கள் செய்ய வேண்டிய கடமை. ஆனால், உடலில் வலு  இருந்தும்;, கையில் வழிச்செலவுக்குப் போதுமான பணம் இருந்தும் புனித  பயணத்தைத் தள்ளிப் போட அவர்கள் காரணம் காட்டுவது திருமணத்திற்குப் பெண்  இருக்கிறாள். அவளுடைய திருமணக் கடமையை முடித்த பின்பே ஹஜ் செய்ய வேண்டும்  என்பதை மார்க்கச் சட்டமாக ஆக்கி விட்டார்கள். மரணம் முந்திக் கொண்டால் ஹஜ்  செய்ய முடியாமலே ஆகிவிடும். இதற்கு யார் காரணம் என்பதை சிந்திக்க  கடமைபட்டுள்ளோம்.&lt;br /&gt;ஏழ்மை அல்லது கொள்கைப் பிடிப்பின் காரணமாகவோ &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88"&gt;வரதட்சணை&lt;/a&gt;  கொடுக்க முடியாத வீட்டுப் பெண்களில் சிலர் மாற்று மதத்தவர்களைக் கூட  மணந்து வாழ்கிறார்கள். ‘இணை வைக்கும் ஒருவனை மணத்தல் கூடாது’ என்பது இறை  கட்டளை. அதை மீற காரணம் யார்?&lt;br /&gt;அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்துள்ள  நாம், எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! ஆனால், துரதிரூஷ்டவசமாக நாம்  அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம்  கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா? அண்ணல் நபி(ஸல்) அவர்கள்  நமக்குக் கற்றுத்தந்துள்ள இஸ்லாமியத் திருமணம் வீண் சம்பிரதாயங்கள் எதுவும்  இல்லாத எளிய, அழகிய வாழ்க்கை ஒப்பந்தம். பிறப்பிலிருந்து இறப்பு வரை  குர்ஆனும், நபிவழியும் சொல்கிறபடி வாழக் கடமைப்பட்டவர்கள் நாம்.  மாற்றுமதத்தினரின் வீண் சம்பிரதாயங்களை பின்பற்ற ஆரம்பித்ததனால் நம்  சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்கள்!&lt;br /&gt;பெண் தேடும் போது, தன்னை விட உயரமான பெண்ணை மணக்க ஒரு ஆண்  விரும்புவதில்லை. தன்னை விட உயரம் குறைந்த பெண்ணையே மணக்க விரும்புகிறான்.  மனோதத்துவரீதியாகப் பார்த்தால், இதற்குக் காரணம், தன் மனைவியை விட தான்  உயர்ந்திருக்க வேண்டும், அவள் அன்னாந்து பார்க்கும் விதத்தில் இருக்க  வேண்டும் என்ற எண்ணம்தான். உடலளவில் மட்டும் உயர்ந்திருந்தால் போதுமா?  உள்ளத்தால் உயருதல் தான் மனிதனுக்கு அழகு. ஒரு பெண்ணும் தன் கணவன் அப்படி  உள்ளத்தால் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள்.  அப்படிப்பட்டவனையே மதிப்பாள். இஸ்லாம் காட்டும் வழிபடி, &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%b0%e0%af%8d"&gt;மஹர்&lt;/a&gt;  கொடுத்து மணம் முடித்து, உங்களால் இயன்ற அளவு வலிமா விருந்து கொடுத்து  உயர்ந்து காட்டுங்கள். உங்கள் இல்லத்திற்குத் தேவையானதை உங்கள் உழைப்பில்  வாங்குவது தான் பெருமை.&lt;br /&gt;இன்று எந்த லாபமும் கருதாமல் ஒரு பெண்ணை மணந்தால், அடுத்த தலைமுறையும்  திருந்தும். இந்தப் ஈனப் பழக்கம் வேரோடு அழிந்து விடும். நம் உடலை விட்டு  உயிர் பிரிந்த வினாடியே நாம் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும் எதுவும்  நமக்கு சொந்தம் இல்லாமல் போய்விடும். கபன் துணியைத் தவிர நம்முடைய எந்தப்  பொருளும் நம்முடன் வரப்போவதில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக்  கொள்ளுங்கள். ‘எடுப்பது’ என்பது மாற்றார் வழி.. ‘கொடுப்பது’ மட்டுமே நம்  வழி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3771561358762699502-8607236083235378390?l=vidivuofmuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vidivuofmuslims.blogspot.com/feeds/8607236083235378390/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/09/blog-post_2031.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/8607236083235378390'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/8607236083235378390'/><link rel='alternate' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/09/blog-post_2031.html' title='கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை)'/><author><name>Niyaz (Fasmir)</name><uri>http://www.blogger.com/profile/00101801541035672859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='17' height='32' src='http://4.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TUw_bdv8ckI/AAAAAAAAAMg/0RSe-Rj8I0s/s220/NiyasFasmir.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3771561358762699502.post-1396813549378191892</id><published>2010-09-08T00:12:00.000-07:00</published><updated>2010-09-08T00:12:32.859-07:00</updated><title type='text'>படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!</title><content type='html'>&lt;a href="http://www.islamkalvi.com/portal/?p=1148"&gt;படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p class="posted"&gt;                 எழுதியவர்/பதிந்தவர்/உரை &lt;a href="http://www.islamkalvi.com/portal/?author=2" title="Posts by தேங்கை முனீப்"&gt;தேங்கை முனீப்&lt;/a&gt; &lt;/p&gt;                             &lt;p style=""&gt;&lt;img src="http://www.islamkalvi.com/portal/wp-content/uploads/2008/03/write.thumbnail.jpg" alt="Article" align="left" hspace="20" /&gt;விரிந்து  பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை  உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின்  ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப்  பறைசாற்றுகின்றன! அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான  விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன.&lt;span id="more-1148"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;சிந்திக்கும் திறன் உள்ளவனே மனிதன்! அண்டப் பெருவெளியின் மையத்தில்  நிற்கும் அவனிடம் இயற்கையாகவே சில கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகள்  அனைத்தும் அவனையும் அவனைச் சூழ்ந்திருக்கும் இப் பெருவெளியைக் குறித்தும்  அறிய விரும்பும் அவனது ஆவலை வெளிப்படுத்துவதாகும். அறியாப் பாமரன் முதல்  அறிவியலாளன் வரை அனைவரது உள்ளத்திலும் இக்கேள்விகள் எழுகின்றன. மனிதனுக்கு  எப்போது அறிவும் சிந்தனையும் வழங்கப்பட்டதோ அன்று முதல் அவன்  இக்கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான். நாகரீக வளர்ச்சியின்  படித்தரங்களை ஆராய்ந்தால் இதுவே நமக்குப் புலப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;மனிதனால் முன்வைக்கப்படும் கேள்விகளில் முதன்மையானது இப்பேரண்டத்தை  உருவாக்கியவன் யார்? என்பதாகும். சிகரங்களின் உச்சியிலோ கடலின் அடியிலோ  ஆகாயத்தின் வெளியிலோ அவற்றை உருவாக்கியவனின் பெயர் எழுதப்படவில்லை. ஆனால்  மலைகள், கடல்கள், ஆகாய வெளி, காற்று, நீர் என ஒழுங்காகப்  படைக்கப்பட்டிருக்கும் பெருவெளியின் ஒவ்வொரு அங்கமும் இதற்குப்பின்னால்  வல்லமை மிக்க ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்பதற்கு அமைதியான சாட்சிகளாக  இருக்கின்றன!&lt;/p&gt; &lt;p&gt;மனிதப் படைப்பை ஓர் உதாரணமாகக் கொள்வோம். தந்தையால் வெளிப்படுத்தப்படும்  இலட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒன்றே ஒன்று மட்டும் தாயின் கருவறையில்  சினை முட்டையுடன் இணைந்து ஒரு கருவாகிறது! ஆரம்ப நிலையிலிருக்கும் இக்  கருவுக்கு தான் பிறந்து செல்லவிருக்கும் வெப்பம், குளிர், காற்று, ஒளி, ஒலி  எல்லாம் உள்ள உலகத்தைக் குறித்த எந்த அறிவும் இருப்பதில்லை! ஆனால் இவற்றை  எல்லாம் அறிந்து கொள்ள உதவும் திசுக்களாக சுயமாகவே பெருக்கமடைகிறது!  ஒன்றாக இருந்தது சுயமாகவே பலகோடி திசுக்களாகப் பெருக்கமடைகின்றன. இதயம்,  நுரையீரல், இரைப்பை முதலான உடலின் உள்ளுறுப்புகள் உருவாகின்றன..  எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றையெல்லாம் நிர்வகிக்கின்ற மிகப்பெரிய  அற்புதமாகிய மூளை உருவாகின்றது! எவ்வாறு இது நடை பெறுகிறது? அற்பமான,  புறக்கண்ணால் பார்க்க இயலாத வேறுபட்டிருந்த இரு அணுக்களை ஒன்றிணையச்  செய்து, இவ்வளவு அற்புதச் செயல்களை நடைபெறச் செய்பவன் யார்? இவற்றக்குப்  பின்னால் உள்ள ஒரு படைப்பாளனை ஏற்றுக் கொள்வதன்றோ அறிவுடைமை?&lt;/p&gt; &lt;p&gt;சிந்தனை செய்து இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d"&gt;குர்ஆன்&lt;/a&gt; அழைக்கிறது!&lt;/p&gt; &lt;p&gt;படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனின் உள்ளமையை அறிந்து கொள்ளுங்கள் என்ற அறிவுப்பூர்வமான கோட்பாடைத் திருக்&lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d"&gt;குர்ஆன்&lt;/a&gt; கூறுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;“ஒட்டகத்தை, அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள்  (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப்  பட்டுள்ளதென்றும், மலைகள், அவை எவ்வாறு நடப்பட்டுள் ளனவென்றும். பூமி, அது  எவ்வாறு விரிக்கப்பட்டுள்ள தென்றும் (அவர்கள் கவனித்துப் பார்க்க  வேண்டாமா?)”&lt;/strong&gt;  (அல்&lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d"&gt;குர்ஆன்&lt;/a&gt; 88: 17-20)&lt;/p&gt; &lt;p&gt;பரந்து வியாபித்திருக்கும் பேரண்டப் பெருவெளியின் அழகிய படைப்பைக்  குறித்து ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் மாபெரும் படைப்பாளனின்  அதியற்புத சக்தியை விளங்கிக் கொள்ள இயலும்! &lt;strong&gt;கற்பனைக் கதைகளுடனும் புரியாத தத்துவங்களுடனும் கடவுளைக் கற்பித்த புராதன கால கட்டத்திலேயே &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d"&gt;இஸ்லாம்&lt;/a&gt; இம்மா பெரும் பிரபஞ்ச நாதனின் வல்லமைகளைக் குறித்த அறிவுப் பூர்வமான விளக்கங்களை அளித்தது!&lt;/strong&gt;  கண்ணை மூடிக் கொண்டு கடவுளை நம்ப வேண்டும் என்பதை விட படைத்தவனைக்  குறித்து அறிந்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d"&gt;இஸ்லாம்&lt;/a&gt; கற்றுத் தருகிறது. இறை கொள்கையில் &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d"&gt;இஸ்லாம்&lt;/a&gt;  நமக்குக் கற்றுத் தரும் இத்தகைய உயர்ந்த கொள்கை இன்று நடைமுறையில் உள்ள  எந்த மதத்திலும் கிடையாது என்பது இஸ்லாமினுடைய தனிச்சிறப்புகளில்  ஒன்றாகும். தன்னைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தைக்  குறித்தும் ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் அந்த இறைவனின்  மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுமாறு மனிதனுக்கு அழைப்பு விடுக்கும்  குர்ஆனிய வசனங்கள் பாமரர் முதல் விஞ்ஞானிகள் வரை புரிந்து கொள்ளக் கூடிய  அளவில் தெளிவாகவும் எளிதாகவும் உள்ளது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு  முதன் முதலில் அருளப்பட்ட வசனங்களைப் பாருங்கள்&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d"&gt;இறைவன்&lt;/a&gt; மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.&lt;/strong&gt; (96: 1 -4)&lt;/p&gt; &lt;p&gt;மேற்கண்ட வசனங்கள் மனிதனின் சிந்தனை உணர்வைத் தட்டியெழுப்பக் கூடியதாக உள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;இவ்வுலகில் மனிதனாகப் பிறப்பதற்கு முன் நம் நிலை எவ்வாறிருந்தது? நம்  தந்தையின் உடலில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுவில் ஒரு அணுவாக, தாயின்  சினைப்பையில் உள்ள கருமுட்டைகளில் ஒரு முட்டையாக வேறுபட்டுக் கிடந்த ஓர்  ஆன்மா. பின்னர் விந்தணுவும் சினை முட்டையும் இணைந்த ஒரு கருவாக. பின்னர்  முதிர்ச்சியடைந்த தசைப் பிண்டமாக. பின்னர் அதில் எலும்புகளும் மஜ்ஜைகளும்  ஊருவாகி கண், காது மூக்கு, கை, கால் என எல்லா உறுப்புகளும் உருவாகி ஒரு  முழு மனிதனாகப் பிறந்து வருகிறோம். இவ்வுலகில் உள்ள கோடிக்கணக்கான  மனிதர்களுள் ஒரு மனிதனாக நாமும் வாழ்கிறோம்! நம்முடைய உடலில் பல்வேறு  செயல்பாடுகள். எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், சுவாச உறுப்புகள், ஜீரண  உறுப்புகள், நோய் எதிர்ப்பு என வியக்கத் தக்க செயல்பாடுகள் நடை பெறுகின்றன.  இன்னின்னவாறு செயல்படுங்கள் என்று நாம் அவ்வுறுப்புகளுக்குக்  கட்டளையிடுவதில்லை! நாம் சாப்பிடுகிறோம், ஜீரணமாகிறது. உடலுக்குத் தேவையான  சக்திகளை உணவிலிருந்து தயாரிக்க உறுப்புகள்! கழிவை வெளியேற்ற, இரத்தத்தைச்  சுத்தீகரிக்க, சிந்திக்க, செயல்பட, எழுத, பேச என அனைத்தும் உடல்  உறுப்புகளின் ஒன்றோடொன்று ஒத்துழைக்கும் வியத்தகு செயல்பாடுகள்! யாருடைய  செயல்பாடு இதற்குப் பின்னால் உள்ளன? கண்ணுக்குத் தெரியாத கற்பனை செய்ய  முடியாத இரு வேறு கூறுகளாகப் பிரிந்து கிடந்த விந்தணுவையும் சினை  முட்டையையும் இணைத்து நம்மைப் படிப்படியாக வளரச் செய்து முழு மனிதனாக்கிய  அவ்விறைவனின் அதியற்புத ஏற்பாடு இது! இவ்வாறு படைத்த இறைவனே நம்மைப் படைத்த  விதத்தை எடுத்துக்கூறி நம்மை சிந்திக்கச் சொல்கிறான். அறியாத பாமரன் முதல்  அறிவியலாளன் வரை இத்தகைய சிந்தனையால் தன் இறைவனைப் பற்றி அறிய உதவும் எளிய  கோட்பாடை குர்ஆன் கற்றுத் தருகிறது. இதோ வல்லமை மிக்கவனாகிய அந்த &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d"&gt;இறைவன்&lt;/a&gt; குர்ஆனில் மக்களைப் பார்த்துக் கேட்கின்றான்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;நீங்கள் எப்படி &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d"&gt;அல்லாஹ்&lt;/a&gt;வை  நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்;  பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச்  செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். &lt;/strong&gt;(2:28)&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால்  படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத்  துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில்  ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர்  அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு  மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்)  செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) &lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d"&gt;அல்லாஹ்&lt;/a&gt; பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.&lt;/strong&gt; (23:12-14)&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?&lt;/strong&gt; (56: 58, 59)&lt;/p&gt; இவ்வாறான வசனங்கள் நம்மைப் படைத்தவனை நோக்கிய சிந்தனையின் பால் இட்டுச்  செல்கிறது. அவ்விறைவனின் மகா வல்லமையை விளங்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே  மனிதனின் ஆன்மீக லௌகீக வாழ்வுகள் சீரடைகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3771561358762699502-1396813549378191892?l=vidivuofmuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.islamkalvi.com/portal/?p=1148' title='படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!'/><link rel='replies' type='application/atom+xml' href='http://vidivuofmuslims.blogspot.com/feeds/1396813549378191892/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/09/blog-post_08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/1396813549378191892'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/1396813549378191892'/><link rel='alternate' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/09/blog-post_08.html' title='படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!'/><author><name>Niyaz (Fasmir)</name><uri>http://www.blogger.com/profile/00101801541035672859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='17' height='32' src='http://4.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TUw_bdv8ckI/AAAAAAAAAMg/0RSe-Rj8I0s/s220/NiyasFasmir.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3771561358762699502.post-2700424782725625841</id><published>2010-09-02T08:17:00.000-07:00</published><updated>2010-09-02T08:17:34.832-07:00</updated><title type='text'>இன்றைய பெண்களின் முக்காடு!</title><content type='html'>&lt;table cellpadding="" cellspacing="5" height="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td height="1" valign="bottom" width="41%"&gt;&lt;xmeta content="MSHTML 6.00.2600.0" http-equiv="Content-Type" name="GENERATOR"&gt; &lt;xbody bgcolor="#ffffff"&gt;  &lt;div align="center" style="line-height: 150%; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &lt;span style="font-family: TheneeUniTx;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-weight: 700;"&gt;&lt;span style="color: navy; font-size: 9pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="line-height: 150%; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &lt;span style="color: #666666; font-family: Arial; font-size: xx-small; line-height: 1.35em;"&gt; &lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/xbody&gt; &lt;/xmeta&gt;      &lt;/td&gt;     &lt;td height="1" valign="top" width="43%"&gt;  &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;  &lt;img border="0" height="79" src="http://www.readislam.net/hijab.jpg" width="94" /&gt;&lt;/span&gt;&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  &lt;span style="color: navy;"&gt;நபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண்  மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி  கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய  துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க  மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் :59] &lt;/span&gt;  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="line-height: 150%; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  &lt;span style="color: navy;"&gt;அபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள்  நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை (அணிந்திருந்தனர்  அது கண்ட) நபி(ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை அவர்களை விட்டும் திருப்பிக்கொண்டு  'அஸ்மாவே' நிச்சயமாக பெண்கள் பூப்பெய்திவிடின் அவர்களின் இது, இதைத் தவிர (வேறு  எதனையும் பிறர்) பார்த்தல் கூடாது' என்று கூறித் தங்களின் முகத்தையும் கைகளையும்  சுட்டிக் காட்டினர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt; line-height: 1.35em;"&gt;&amp;nbsp;  கீழ்கண்ட கட்டுரையில் வரும் சம்பவங்களும், நபர்களும் உண்மையே அன்றி கற்பனை அல்ல.  இக்கட்டுரையில் வரும் சம்பவங்கள், நபர்கள் உங்களை போல் இருந்தால் அதற்கு தாங்களே  பொறுப்பு. நாங்கள் அல்ல. நமது சகோதரிகளின் அலட்சியத்தால் அல்லது கவன குறைவால் இது  கூட சரியான வார்த்தையாக தோன்றவில்லை. இப்படி கூட நடக்குமா? என்ற எண்ணத்தில்  செயல்படுவதால் இப்படி நம்மை எண்ண வைக்கிறது. இதை படித்துவிட்டு சகோதரிகளிடம்  இருந்து காரசாரமான அம்பு மழைகளை எதிர்பார்க்கிறோம். நாம் குறை சொல்வது  நோக்கமல்ல. நம்மை நாமே பரிசோதனை செய்வதே நோக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; முக்காடு என்பது தமிழ் பேசும் சகோதரிகளால் பல வண்ணங்களில்  துப்பட்டி, அரை துப்பட்டி, முழு துப்பட்டி, கூசாலி துப்பட்டி, புர்கா என்று  அழைக்கப்படுகிறது. அதற்கு கற்பனையான வடிவம் கொடுத்து அதை அணிவதையே இஸ்லாமிய உடையாக  கருதுகிறார்கள். உண்மையில் இஸ்லாமிய உடை என்று ஒன்று இல்லை. அந்தந்த நாடுகளில்  சகோதரிகள் அங்குள்ள தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, இறைத் தூதர் சொன்ன வழியில்  அணிவதே இஸ்லாமிய உடையாகும். முகம், இரு கைகள் மட்டும் தெரிய மற்ற உடல் உறுப்புகளை  மறைப்பது, இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது அனைத்தும் இஸ்லாமிய உடையாகும். அது எந்த  வண்ணத்தில், வடிவில் இருந்தாலும் சரியே. &lt;/span&gt; &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt; line-height: 1.55em;"&gt; இக்கட்டுரையின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் அதே வார்த்தையை  பயன்படுத்துகிறோம். உண்மை நிலையை உணர்த்தவே இவ்வாறு அழைக்கிறோம்.&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; முக்காடு இடுதலை பலவகையாக பிரிக்கலாம். அவற்றில் சிலவற்றை  மட்டும் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 1.பார்த்தால் முக்காடு &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இக்காட்சியை பெரும்பாலான இடங்களில் காணமுடியும். மாற்று மத  நபர்களுடன் (ஆண்கள் உட்பட) பேசிக்கொண்டு இருப்பார்கள். முக்காடு இருக்காது.  யாராவது ஒரு தாடியையோ, தொப்பியையோ, கைலியையோ அல்லது முஸ்லிம்களை  பார்த்துவிட்டால் போதும். உடனே முக்காட்டை சரியாக இழுத்து போட்டுக் கொள்வார்கள்.  சகோதரிகளே! முக்காடு உங்களுக்கா!? மற்றவர்களுக்கா!? முக்காடு என்பது முஸ்லிம்களின்  கண்களில் இருந்து பாதுகாக்க மட்டும் தானா!? மாற்று மத சகோதரர்களின் கண்களில்  இருந்து பாதுகாக்க தேவை இல்லையா !!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 2.கிராமிய முக்காடு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; முஸ்லிம் சகோதரிகள், உள்ளூரிலும், அண்டை வீடுகளுக்கும்,  ஊர்களுக்கும் செல்லும் போது முக்காடு இட்டு போவார்கள். கொஞ்சம் பெரிய  நகரங்களுக்கு (திருச்சி, தஞ்சை, மதுரை, சென்னை) போகும் போது முக்காட்டுக்கு  மூட்டை கட்டி விட்டு மற்ற இன பெண்களுள் கலந்துவிடுகிறார்கள். தங்களது அடையாளத்தை  அறியாத அப்பாவிகள். ஏன்!? முக்காடு கிராமங்களுக்கு மட்டும் தானா!?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 3.கிழடு கட்டை முக்காடு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இக்காட்சியை நகர் புறங்களில் காணலாம். முக்காடு அவசியம்  தேவைப்படும் இளம் சகோதரிகள் அதை மறந்துவிட்டு (!) 'ஹாயாக' போய்க்கொண்டு  இருப்பார்கள். முக்காடு அவசியம் தேவைப்படாத வயதான பெண்மணிகள் முக்காடு இட்டு  செல்வார்கள். அதற்கு இளம் நங்கையர் சொல்லும் காரணம். முக்காடு எல்லாம் பத்தாம்  பசலி தனம். அது எல்லாம் இக்காலத்துக்கு பொருந்தாது!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;b&gt;4.சீருடை முக்காடு (Uniform)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இது மார்க்க கல்வி, பள்ளிவாசல்கள், இறந்தவர்களின் வீடுகள் என  செல்லும்போது மட்டும் பயன்படுத்துவார்கள். (குழந்தை பள்ளிக்கு செல்லும்போது  மட்டும் அணியும் சீருடை போல) மற்ற நேரங்களில் அதை அப்படியே மாட்டி வைத்து  விடுவார்கள். முக்காடும் சீருடையாகி விட்டதா!?&lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt;&lt;b&gt; &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  5.சவுதி முக்காடு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  இவர்கள் சவூதி அல்லது&amp;nbsp; மற்ற முஸ்லிம் நாடுகளில் வசிக்கும்போது அந்த நாடுகளின்  சட்டங்களுக்கு உட்பட்டு முக்காடிட்டு இருப்பார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளை விட்டு  வெளிநாடுகளுக்கு&amp;nbsp; செல்லும்போது அந்த பழக்கத்தை அங்கேயே விட்டு விட்டு  வந்துவிடுவார்கள், ஏன்? மன்னர் போடும் சட்டங்களுக்கு அடிபணியும் சகோதரிகள் அந்த  மன்னனை படைத்த அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது ஏனோ?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt; line-height: 1.55em;"&gt; &lt;/span&gt;&lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt; line-height: 1.55em;"&gt;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 6.ஏர்போர்ட் முக்காடு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இது வெளிநாடு செல்லும் சகோதரிகளிடம் காணப்படுகிறது. சகோதரிகள்  தங்களது சொந்த வீட்டை விட்டு (தமிழகத்தில்) புறப்படும் போது முக்காடு இட்டு  ஏர்போர்ட் உள்ளே நுழையும் வரை போட்டு இருப்பார்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு  முக்காட்டை அப்படியே கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மீண்டும்  வெளிநாட்டில் இருந்து வரும் போது முக்காடு ஏர்போர்ட்டில் இருந்து தொடங்கும்.  வெளிநாட்டில் முக்காடு இட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது இவர்கள் சொல்லும்  காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இப்படி முக்காடு இடுதலை பலவகையாக காணலாம். முக்காடு போடும்  பெரும்பாலான பெண்கள் (அனைவரும் அல்ல) தாங்கள் முக்காடு போடாவிட்டால் கிழடு,  கட்டைகள் ஏதாவது சொல்வார்கள், நினைப்பார்கள் என ஒரு சமுதாய அங்கீகாரத்துக்காகவே  போடுகிறார்கள், முக்காடு தங்களது தற்காப்புக்காகத்தான் என்பதை எத்தனை பேர்  உணர்கிறார்கள். உண்மையில் பாலியியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களில், முக்காடு  இட்ட பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஒளிவு மறைவு அற்ற சுதந்திரமாக வாழும்  நாடுகளில் ஒழுக்க கேடுகளின் பட்டியலை எழுதினால் அது நீண்டு கொண்டே போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; கல்யாணமில்லா குடும்பங்கள், தகப்பன் இல்லா குழந்தைகள், தகப்பன்  பெயர் அல்லா முகமறியாத குழந்தைகள், பாசத்திற்கு அழும் குழந்தைகள், பிஞ்சிலே பழுத்த  கிழங்கள், மணமாவதற்கு முன்பே குடும்ப உறவு காதல் பெயரில், முதியோர் இல்லங்கள்  இப்படி எத்தனை எத்தனையோ.....&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; முக்காடு என்பது நம்மை தனிமைப்படுத்தவோ, அடையாளம் காட்டவோ அல்ல.  தன்னுடைய பாதுகாப்புக்கு இறைவன் வழங்கியுள்ள சாதனம் என்பதை நாம் ஏன் உணர  தவறிவிட்டோம்.!?&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; படித்த நமது சகோதரிகள் அடிமை தனம், ஆண் வர்க்கத்தின் ஆதிக்கம்,  பத்தாம் பசலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt; line-height: 1.35em;"&gt; &lt;/span&gt; &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;கிறிஸ்துவர்கள் அதிகமாக  வாழும் மேலை நாடுகளில் முஸ்லீகள் தாங்கள் மட்டும் முக்காடு அணிந்தால் போதாது  தங்களது குழந்தைளுக்கும் பள்ளிக்கூடத்தில் முக்காடு போட அனுமதி வேண்டும் என  போராட்டம் செய்கிறார்கள், வாகன உரிமை சான்றிதழில் முக்காடுடன் உள்ள படம்தான்  வேண்டும் என அரசாங்கத்தின் மீது வழக்கு போடுகிறார்கள். ஒரு பிரபலமான தமிழ் நடிகை  படப்பிடிப்புக்கு வரும்போது தன்னை முழுமையாக மறைத்துக்கொண்டு முக்காடு இட்டு  வருகிறாள். ஏன் என்ன காரணம் என கேட்டதற்கு மக்களின் கண்களில் இருந்து தப்பவே  என்கிறார் !!!!!!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &amp;nbsp;&lt;/div&gt;&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt; line-height: 1.45em;"&gt; &lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நவ நாகரீகமான சுதந்திரமான அமெரிக்க குட்டை பாவாடையுடன் வாழ்ந்த  ஒரு பெண் இஸ்லாத்தை தழுவிய பின்பு, முக்காட்டை பற்றி கூறிய கூற்று:- குட்டை  பாவாடையுடன் சுதந்திரமாக சுற்றி வந்த போது கிடைக்காத சுதந்திரம் முக்காடு போட்ட  பின்பு தான் கிடைத்தது என கூறுகிறார். &lt;/div&gt;&lt;/span&gt; &lt;span style="font-family: TSCu_InaiMathi; font-size: 11pt; line-height: 1.45em;"&gt; &lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt;    &lt;xmeta content="MSHTML 6.00.2600.0" http-equiv="Content-Type" name="GENERATOR"&gt; &lt;xbody bgcolor="#ffffff"&gt;        &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt; line-height: 1.45em;"&gt; &amp;nbsp;&amp;nbsp; "உயர்ந்த பொருளைத்தான் பாதுகாப்பாக வைத்திருப்போம். வைரத்தை தான்  பட்டு துணியில் சுற்றிபாதுகாப்பாக வைப்பார்கள்.கற்களையோ ,கூலாங்கற்களையோ அல்ல.  இஸ்லாத்தில் பெண்களுக்கு மிகுந்த சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.அதை  உணர்ந்து, நீங்கள் வைரம் என்றால் முக்காடு இடுங்கள். இல்லை..இல்லை... நாங்கள்  கூலாங்கற்கள் என்றால்...&amp;nbsp; சகோதரிகளே நீங்கள் வைரமா ??? கூலாங்கற்களா !!!! "&lt;/span&gt;&lt;/xbody&gt;&lt;/xmeta&gt;&lt;/div&gt;&lt;/span&gt; &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt; line-height: 1.45em;"&gt; &lt;/span&gt;&lt;div align="justify" style="line-height: 1.6; margin-bottom: 0pt; margin-top: 0pt;"&gt; &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt; line-height: 1.45em;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பெண்ணே, முக்காடு என்பது உனக்காக, உன் பாதுகாப்புக்காக என்பதை  நீ உணராத போது நீ ஏன் பிறருக்காக முக்காடு போடுகிறாய். அது உனக்கு அல்லாஹ்  வழங்கியுள்ள கொடை என்று நீ அறியாத வரை அதை போடாதே என சொல்ல எனக்கு உரிமை இல்லை.  ஆனால் உணர்ந்து போடு என்று கூறத்தான் ஆசைப்படுகிறேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3771561358762699502-2700424782725625841?l=vidivuofmuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vidivuofmuslims.blogspot.com/feeds/2700424782725625841/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/2700424782725625841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/2700424782725625841'/><link rel='alternate' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/09/blog-post.html' title='இன்றைய பெண்களின் முக்காடு!'/><author><name>Niyaz (Fasmir)</name><uri>http://www.blogger.com/profile/00101801541035672859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='17' height='32' src='http://4.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TUw_bdv8ckI/AAAAAAAAAMg/0RSe-Rj8I0s/s220/NiyasFasmir.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3771561358762699502.post-5983594601145521036</id><published>2010-08-24T22:39:00.000-07:00</published><updated>2010-08-24T22:39:57.012-07:00</updated><title type='text'>ரமழான்  இரவுத் தொழுஹை (தராவிஹ்)</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_jdvYg2oPTbg/THSrWpbptJI/AAAAAAAAAEU/uuBNafSYIrA/s1600/seaed.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_jdvYg2oPTbg/THSrWpbptJI/AAAAAAAAAEU/uuBNafSYIrA/s320/seaed.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;நீண்ட காலமாக உலக மெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் இரவுகளில் தராவீஹ் என்ற      பெயரால் 20 ரகஅத்துகள் தொழு வருகிறார்கள். பரம்பரைபரம்பரையாக&amp;nbsp;20      ரகஅத்துகள்&amp;nbsp;தொழுது&amp;nbsp;வருவதால்&amp;nbsp;அதை நியாயபடுத்தவே மனித மனம் விரும்புகின்றது.      ஆனால் மனித விருப்பம் மார்க்கம் ஆக முடியாது. அல்லாஹ்(ஜல்), நபி(ஸல்) அவர்களைக்      கொண்டு, மார்க்கமாகக் காட்டித் தந்தது மட்டும்தான்&amp;nbsp;மார்க்கமாக முடியும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;a href="http://www.readislam.net/taraweeh.htm"&gt;மேலும் படிக்க....&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3771561358762699502-5983594601145521036?l=vidivuofmuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vidivuofmuslims.blogspot.com/feeds/5983594601145521036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/08/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/5983594601145521036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/5983594601145521036'/><link rel='alternate' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/08/blog-post_24.html' title='ரமழான்  இரவுத் தொழுஹை (தராவிஹ்)'/><author><name>Niyaz (Fasmir)</name><uri>http://www.blogger.com/profile/00101801541035672859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='17' height='32' src='http://4.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TUw_bdv8ckI/AAAAAAAAAMg/0RSe-Rj8I0s/s220/NiyasFasmir.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_jdvYg2oPTbg/THSrWpbptJI/AAAAAAAAAEU/uuBNafSYIrA/s72-c/seaed.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3771561358762699502.post-3035683106818563642</id><published>2010-08-24T12:02:00.000-07:00</published><updated>2010-08-24T12:02:06.694-07:00</updated><title type='text'>ரமழான் நோன்பின் சிறப்புக்கள்</title><content type='html'>&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு          வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில்          தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான          "லைலத்துல் கத்ர்" இரவை&amp;nbsp;பெற்றவரின் முந்திய பாவங்கள்          மன்னிக்கப்படுகின்றன&amp;nbsp;என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்:          அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;a href="http://www.readislam.net/fasting.htm"&gt;மேலும்&amp;nbsp; பல சிறப்புக்கள்... &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3771561358762699502-3035683106818563642?l=vidivuofmuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vidivuofmuslims.blogspot.com/feeds/3035683106818563642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/3035683106818563642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/3035683106818563642'/><link rel='alternate' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/08/blog-post.html' title='ரமழான் நோன்பின் சிறப்புக்கள்'/><author><name>Niyaz (Fasmir)</name><uri>http://www.blogger.com/profile/00101801541035672859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='17' height='32' src='http://4.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TUw_bdv8ckI/AAAAAAAAAMg/0RSe-Rj8I0s/s220/NiyasFasmir.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3771561358762699502.post-4572901086399220657</id><published>2010-07-20T02:50:00.000-07:00</published><updated>2010-07-20T02:51:01.997-07:00</updated><title type='text'></title><content type='html'>hi every bodyies&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3771561358762699502-4572901086399220657?l=vidivuofmuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vidivuofmuslims.blogspot.com/feeds/4572901086399220657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/07/hi-every-bodyies.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/4572901086399220657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3771561358762699502/posts/default/4572901086399220657'/><link rel='alternate' type='text/html' href='http://vidivuofmuslims.blogspot.com/2010/07/hi-every-bodyies.html' title=''/><author><name>Niyaz (Fasmir)</name><uri>http://www.blogger.com/profile/00101801541035672859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='17' height='32' src='http://4.bp.blogspot.com/_jdvYg2oPTbg/TUw_bdv8ckI/AAAAAAAAAMg/0RSe-Rj8I0s/s220/NiyasFasmir.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
